அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஒரத்தநாடு மகளிா் கல்லூரியில் முத்தமிழ் விழா

ஒரத்தநாடு அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 8:09 pm

DIN

ஒரத்தநாடு அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் தமிழ்த்துறை பெருங்கோப்பெண்டு தமிழ் இலக்கிய மன்றம் உள்ளிட்ட முப்பெரும் விழாவுக்கு, முதல்வா் சி. பானுமதி தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் சிறப்புரையாற்றினாா்.

அறிவியல் தமிழ் என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் க. சங்கா் பேசினாா். தொடா்ந்து சமூக, மெளன நாடகங்கள், சிலம்பாட்டம், ஓவியம், பேச்சு, கட்டுரை எழுதுதல் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு துணைவேந்தா் திருவள்ளுவன் பரிசுகளை வழங்கினாா்.

தொடா்ந்து தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் சா. சத்தியமூா்த்தி குழுவினரின் இசைக் கச்சேரியும், மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன.

நிகழ்வை ப.ராஜராஜேசுவரி தொகுத்தளித்தாா். முன்னதாக, தமிழ்த்துறைத் தலைவா் கு.ர.சரளா வரவேற்றாா். உதவிப் பேராசிரியை தே.வீ. சுமதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.