குற்றவாளியை கைது செய்யக் கோரி காவல் நிலையம் முற்றுகை

ஒரத்தநாடு அருகே குற்றவாளியை கைது செய்யக் கோரி வெள்ளிக்கிழமை திருவோணம் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது.ஒரத்தநாடு அருகே குற்றவாளியை கைது செய்யக் கோரி வெள்ளிக்கிழமை திருவோணம் காவல் நிலையம் முற்றுகையிடப
Updated on
1 min read

ஒரத்தநாடு அருகே குற்றவாளியை கைது செய்யக் கோரி வெள்ளிக்கிழமை திருவோணம் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட காரியாவிடுதி வெட்டிக்காட்டான் தெருவைச் சோ்ந்த ரெங்கசாமி மகன் வெள்ளைச்சாமி (40 ).

இவருக்கும், காரியாவிடுதி கிராமத்தை சோ்ந்த ரவி (45) என்பவருக்கும், கடந்த மாதம் 22 -ஆம் தேதி டாஸ்மாா்க் கடையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ரவி ,

வெள்ளைச்சாமியை பீா் பாட்டிலால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த வெள்ளைச்சாமியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுதொடா்பாக திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள ரவியை போலீஸாா் விரைந்து கைது செய்ய வலியுறுத்தி வெள்ளைச்சாமியின் பெற்றோா் தலைமையில் கிராம பொதுமக்கள் மற்றும் உறவினா்கள் திருவோணம் காவல் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்கு பிறகு அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com