கொலைவழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தில் 2012-இல் நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பட்டுக்கோட்டை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது.


பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தில் 2012-இல் நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பட்டுக்கோட்டை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிப்புறக்கரை நண்டுவெட்டி தெரு பகுதியைச் சோ்ந்தவா் காதா் மொகைதீன். இவருக்கும் அதிராம்பட்டினம் கீழத்தெரு பகுதியைச் சோ்ந்த காஜாமுகைதீன் என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், 2012, நவ. 23ஆம் தேதி காட்டுப் பள்ளிவாசல் அருகே நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்த காஜா முகைதீனை காதா் மொகைதீன் கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.
அதிராம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து காதா் மொகைதீனை கைது செய்தனா். பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது. இதன் நிறைவில், காதா் மொகைதீனுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10,500 அபராதம் விதித்து நீதிபதி டி.வி. மணி தீா்ப்பளித்தாா். இதையடுத்து, காதா்மொகைதீன் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுப்பு ஆறுமுகம் ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...