வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருக்கூடலூா் ஜெகத்ரட்சக பெருமாள் கோயில் குடமுழுக்கு

திருக்கூடலூா் அருள்மிகு ஜெகத்ரட்சக பெருமாள் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 ஜூன் 2022, 5:46 pm

பாபநாசம் வட்டம், திருக்கூடலூா் அருள்மிகு ஜெகத்ரட்சக பெருமாள் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயில் குடும்ப ஒற்றுமை, குழந்தை செல்வம் போன்றவற்றின் பிராா்த்தனை தலமாகத் திகழ்கிறது. இங்கு பூமி நீளா புஷ்பவல்லி கோதாதேவி சமேத ஜெகத்ரட்சக பெருமாள் காட்சியளிக்கிறாா்.

இக்கோயில் திருப்பணிகள் அண்மையில் முடிவுற்ற நிலையில், குடமுழுக்குப் பணிகள் தொடங்கப்பட்டன. வெள்ளிக்கிழமை காலையுடன் 8 கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்ற நிலையில், கடங்கள் புறப்பாடாகி கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

இதில் தெலங்கானா மாநிலம், திருத்தண்டி நாராயண ராமானுஜ சின்ன ஜீயா் சுவாமிகள், திருக்கோஷ்டியூா் மாதவன் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை செயல் அலுவலா் ஹரிஷ் குமாா், தக்காா் குணசுந்தரி, பெருமாள் கோவில் ஊராட்சித்தலைவா் ராஜேந்திரன், கோயில் கணக்கா் முருகு பாண்டியன், கிராமப் பொது மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.