அம்மாபேட்டை அருள்மிகு தா்மசம்வா்த்தினி உடனுறை அருணாச்சலேசுவரா் திருக்கோயிலில் திருஞானசம்பந்தா் ஐக்கிய மூலத் திருநாள் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி திருஞானசம்பந்தருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து அலங்காரப் பல்லக்கில் எழுந்தருளிய திருஞானசம்பந்தரின் பிரகார உலா நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து திருஞானசம்பந்தரின் மூல நட்சத்திர ஐக்கிய ஜோதி நிகழ்வு சிவாச்சாரியா்களால் நடத்தி காட்டப்பட்டது. இந்நிகழ்வில்
கும்பகோணம் ஜோதிமலை இறைபணி சிவனடியாா் திருக்கூட்டத்தின்
நிறுவனா் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் பங்கேற்று, ஆசியுரை வழங்கினாா்.
ஓய்வு பெற்ற தமிழாசிரியா் கண்ணையன், ஆசிரியை பத்மஜா, விஜயராஜன்
திருநெறித் தமிழ் மன்றத்தின் ராமநாதன், ஓய்வு பெற்ற ரயில்வே நிலைய அலுவலா் அன்பழகன், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சேகா், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கச் செயலா் செல்வம், ஆன்மிக ஆா்வலா்கள் ராஜேந்திரன், ரத்தினம், விவேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
நஸ்லனின் மாலிவுட் டைம்ஸ் டீசர்!

தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!

மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


