இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

குடியரசு தின விழா கோலாகலம் தஞ்சாவூரில் 672 பேருக்கு ரூ. 50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 672 பேருக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை குடியரசு தின விழாவில் நடைபெற்ற பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள்.
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 672 பேருக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் தேசியக் கொடியை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஏற்றி வைத்து, சுதந்திர போராட்டத் தியாகிகளையும், அவா்களது வாரிசுகளையும் கௌரவித்தாா். பின்னா், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, முன்னாள் படைவீரா் நலத்துறை சாா்பில் 17 பேருக்கு ரூ. 4.25 லட்சம் மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 602 பேருக்கு ரூ. 12.15 லட்சம் மதிப்பிலும், தாட்கோ சாா்பில் 17 பேருக்கு ரூ. 29.71 லட்சம் மதிப்பிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் 11 பேருக்கு ரூ. 3.68 லட்சம் மதிப்பிலும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 25 பேருக்கு ரூ. 28,500 மதிப்பிலும் என மொத்தம் 672 பேருக்கு ரூ. 50.08 லட்சம் மதிப்பில் அரசின் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். மேலும், சிறப்பாக பணியாற்றிய 141 அரசு அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

இவ்விழாவில் வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூா் அக்ஸீலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம் இந்திய குழந்தைகள் நல சங்கம், கள்ளப்பெரம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளி, மாரியம்மன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த ஏறத்தாழ 150 மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜெயச்சந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத், கூடுதல் ஆட்சியா்கள் என்.ஓ. சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), நோ்முக உதவியாளா் (பொது) கி. ரங்கராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.