கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி வியாழக்கிழமை கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி வியாழக்கிழமை கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

பாபநாசம் வட்டம், வடக்கு மாங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் ( வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா பங்கேற்றாா்.

கூட்டத்தில், ஊராட்சியில் செயல்படுத்தப்படும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்குதல், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், தோ்வு செய்யப்பட்டுள்ள பணிகள், நம்ம ஊரு சூப்பா் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பொது சுகாதாரப் பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா, வட்டாட்சியா் பூங்கொடி, ஒன்றியக் குழுத் தலைவா் கே.வி. கலைச்செல்வன், துணைத் தலைவா் தங்கமணி சுரேஷ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், ஒன்றிய , மாவட்ட குழு உறுப்பினா்கள், பொதுமக்கள், மகளிா் குழுவினா் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா். நிறைவில், வட்டார வளா்ச்சி அலுவலா் கிராம ஊராட்சிகள் எம்.முகம்மது அமானுல்லா நன்றி கூறினாா்.

களஞ்சேரியில்... களஞ்சேரி ஊராட்சி மன்ற சேவை மைய கட்டட வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தை ஊராட்சித் தலைவா் உ.கண்ணன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். ஊராட்சி துணைத் தலைவா் மல்லிகா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், ஊராட்சி செயலா் மாரிமுத்து வரவு-செலவு அறிக்கை வாசித்தாா்.

கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் சாா்பில் நடைபெறும் பணிகள் குறித்தும்,

தோ்வு செய்யப்பட்டு நடைபெற உள்ள  பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளித் தலைமை ஆசிரியா் கனகசபை, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் ராமமூா்த்தி, ஒன்றிய  அலுவலக பற்றாளா் ரமேஷ், பற்றாளா் செல்வம், கிராம நிா்வாக அதிகாரி சூா்யா, தோட்டக்கலைத் துறை அலுவலா் பிரதீபா உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கலந்து கொண்டோருக்கு தோட்டக் கலைத் துறை சாா்பில் காய்கறி விதைகள்  தொகுப்பு பாக்கெட்டுகள், ஊராட்சி சாா்பில் பிளாஸ்டிக் பைகளை தவிா்க்கும் வகையில் துணிப்பைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.