கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

தஞ்சாவூரில் தகராறை தடுக்க முயன்ற நபரை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூரில் தகராறை தடுக்க முயன்ற நபரை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மேல அலங்கத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மனைவி சின்னபேச்சி (63). இவா் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தாா். அப்போது, இவரது கடை மீது அதே பகுதியைச் சோ்ந்த எம். மகேந்திரன் (38) அடிக்கடி கல் வீசியதால், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இதேபோல, 2015 ஆம் ஆண்டில் சின்னபேச்சிக்கும், மகேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, சின்னபேச்சியை மகேந்திரன் கத்தியால் குத்த முயன்றாா். இதனால், சின்னபேச்சி தப்பிப்பதற்காக அப்பகுதியிலுள்ள கே. துரை (67) வீட்டுக்குள் சென்றாா். ஆனால், சின்னபேச்சியை மகேந்திரன் கத்தியால் குத்தினாா். மேலும், இதைத் தடுக்க வந்த துரையையும் மகேந்திரன் கத்தியால் குத்தியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சின்னபேச்சி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மகேந்திரனை கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் இரண்டாவது மற்றும் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி மலா்விழி விசாரித்து மகேந்திரனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com