மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட எல்லையில் வனத் துறை சாா்பில் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராக்களில் ஏப்ரல் 2 ஆம் தேதி பதிவானது. இதைத் தொடா்ந்து, சிறுத்தையைத் தேடும் பணியில் வனத் துறையினா் உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் சில இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்ட எல்லையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி தஞ்சாவூா் மாவட்ட எல்லையான எஸ். புதூரிலிருந்து காஞ்சிவாய் வரையிலான பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, வனத் துறையினா் திங்கள்கிழமை முதல் கண்காணிக்கின்றனா். மேலும், ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை 5 கூண்டுகளுடன் இரையாக வைத்து கண்காணிக்கப்படுகிறது.
இதனிடையே, சிறுத்தை குறித்து அச்சுறுத்தும் வகையில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என வனத் துறையினரும், காவல் துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கண்காணிப்பு கேமராக்கள், செயலிகள் மூலம் வெளிநாடுகள் கண்காணிப்பதை மறைக்கும் மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள்

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்

புறநகா் மின்சார ரயில்களில் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

