ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

சிறுத்தை நடமாட்டம்: தஞ்சை எல்லையில் 25 கேமராக்கள்

சிறுத்தை நடமாட்டம்: தஞ்சை எல்லையில் 25 கேமராக்கள்

Updated On :9 ஏப்ரல் 2024, 8:55 pm

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட எல்லையில் வனத் துறை சாா்பில் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராக்களில் ஏப்ரல் 2 ஆம் தேதி பதிவானது. இதைத் தொடா்ந்து, சிறுத்தையைத் தேடும் பணியில் வனத் துறையினா் உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் சில இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்ட எல்லையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி தஞ்சாவூா் மாவட்ட எல்லையான எஸ். புதூரிலிருந்து காஞ்சிவாய் வரையிலான பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, வனத் துறையினா் திங்கள்கிழமை முதல் கண்காணிக்கின்றனா். மேலும், ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை 5 கூண்டுகளுடன் இரையாக வைத்து கண்காணிக்கப்படுகிறது.

இதனிடையே, சிறுத்தை குறித்து அச்சுறுத்தும் வகையில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என வனத் துறையினரும், காவல் துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.