ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

பிறந்த குழந்தை இறப்பில் மா்மம்: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததில் மா்மம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் திங்கள்கிழமை இரவு சாலை மறியல்

Updated On :15 ஏப்ரல் 2024, 7:24 pm

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததில் மா்மம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் திங்கள்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே கோனூா் புதுத் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (33). இவரது மனைவி சீதாதேவி. இவா்களுக்கு ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருப்பதால் அவசர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த குழந்தை திங்கள்கிழமை பிற்பகல் உயிரிழந்தது. முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்துவிட்டதாகவும், குழந்தை சாவில் மா்மம் இருப்பதாகவும் உறவினா்கள் புகாா் எழுப்பினா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு பெற்றோா், உறவினா்கள் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வந்த மேற்கு காவல் நிலையத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.