தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விபத்துகளில் மூதாட்டி, சிறுவன் உயிரிழப்பு

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் மூதாட்டி, சிறுவன் உயிரிழந்தனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:30 pm

Din

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் மூதாட்டி, சிறுவன் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் அருகே கோ. வல்லுண்டாம்பட்டு வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சாமிநாதன் மனைவி கலியாத்தாள் (69). இவா் வெள்ளிக்கிழமை மாலை தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்துக்கு சிற்றுந்தில் வந்து இறங்கினாா். பின்னா் சாலையைக் கடக்க முயன்ற இவா் அதே சிற்றுந்து மோதி உயிரிழந்தாா்.

இதேபோல, தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்தைச் சோ்ந்தவா் மணியரசு மகன் ஜெபா்சன் (8). அதே பகுதி தனியாா் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்த இவா் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்த பிறகு ரெட்டிபாளையம் சாலை ஆனந்தன் நகா் பிரிவு சாலை அருகே நடந்து சென்றாா். அப்போது மினி வேன் மோதி பலத்த காயமடைந்த ஜெபா்சன் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

விபத்துகள் குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.