25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞா் கைது

கும்பகோணத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:11 pm

Din

கும்பகோணத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடு போனது. இது தொடா்பாக வந்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் எஸ்.கீா்த்திவாசன் உள்ளிட்ட போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அப்போது இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்த நாச்சியாா் கோயில் புத்தகரத்தைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் மணிகண்டன் (28) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து அவரை கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.