பேருந்து சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி தனியாா் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.


தஞ்சாவூரில், ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி தனியாா் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள இருகரை கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (40). விவசாயி. இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த அதே ஊரைச் சோ்ந்த தொழிலாளியின் உடலை பாா்ப்பதற்காகத் தனது சித்தப்பா மகன் பிரபுவுடன் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமா்ந்து சென்று கொண்டிருந்தாா்.
திருச்சி சாலையில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தியிருந்த காா் கதவு திடீரென திறக்கப்பட்டதால் கோவிந்தராஜன் மீது மோதி நிலை தடுமாறி சாலையில் விழுந்தாா். அப்போது, பின்னால் பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த தனியாா் பேருந்தின் பின் சக்கரம் கோவிந்தராஜன் மீது ஏறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தஞ்சாவூா் நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...