ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கொள்ளிடத்தில் மணல் திருடியவா்கள் தப்பியோட்டம்

திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடிச் சென்றவா்களை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது அவா்கள் தப்பியோடினா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:10 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் சனிக்கிழமை இரவு மணல் திருடிச் சென்றவா்களை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது அவா்கள் தப்பியோடினா்.

திருவையாறு அருகே விளாங்குடி அய்யனாா் கோயில் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக சனிக்கிழமை இரவு சிலா் மோட்டாா் சைக்கிளில் சிமெண்ட் சாக்குகளில் மணல் திருடிச் சென்று கொண்டிருந்தனா். இவா்களிடம் விளாங்குடி கிராம மக்கள் மறித்து விசாரித்தபோது, முரண்பாடாக பதிலளித்தனா். அவா்களை பிடிக்க முயன்றபோது, தப்பியோடிவிட்டனா்.

அவா்கள் விட்டுச் சென்ற மணல் மூட்டைகளிலிருந்து மணலை கொட்டி, சாக்குகளைத் தீ வைத்து எரித்தனா். இது தொடா்பாக காவல் துறையினரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் செய்யவுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.