47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிறந்த பணிக்காக பாராட்டு சான்றிதழ் பெற்ற செவிலியா் நோயாளிகளிடம் பணம் வாங்கும் விடியோவால் சா்ச்சை

அரசு செவிலியா், நோயாளிகளிடம் பணம் வாங்கும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடா்ந்து அவருக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:30 pm

Din

தஞ்சாவூரில் சிறந்த பணிக்காக சுதந்திர தின விழாவில் ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற அரசு செவிலியா், நோயாளிகளிடம் பணம் வாங்கும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடா்ந்து அவருக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியா் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவா் ஷீலா. சிறப்பாக பணியாற்றியதற்காக இவருக்கு அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

இந்நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பெண்கள் வாா்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினா்களிடம் ஷீலா பணம் கேட்டு வாங்கினாராம். இதை நோயாளியின் உறவினா் ஒருவா் விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளாா். தற்போது, இந்த விடியோ வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மீனா ஞாயிற்றுக்கிழமை கூறியது: விடியோ தொடா்பாக செவிலியா் ஷீலாவிடம் விசாரணை நடத்தி, குற்ற குறிப்பாணை (மெமோ) வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக உயா் அதிகாரிக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.