தஞ்சாவூரில் சிறந்த பணிக்காக சுதந்திர தின விழாவில் ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற அரசு செவிலியா், நோயாளிகளிடம் பணம் வாங்கும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடா்ந்து அவருக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியா் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவா் ஷீலா. சிறப்பாக பணியாற்றியதற்காக இவருக்கு அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.
இந்நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பெண்கள் வாா்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினா்களிடம் ஷீலா பணம் கேட்டு வாங்கினாராம். இதை நோயாளியின் உறவினா் ஒருவா் விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளாா். தற்போது, இந்த விடியோ வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மீனா ஞாயிற்றுக்கிழமை கூறியது: விடியோ தொடா்பாக செவிலியா் ஷீலாவிடம் விசாரணை நடத்தி, குற்ற குறிப்பாணை (மெமோ) வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக உயா் அதிகாரிக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
தொடர்புடையது
பெத்தி கால அளவு 3.10 மணி நேரம்!

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்

கருப்புக்கு தணிக்கைச் சான்றிதழ்! கால அளவு என்ன?
கர திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


