தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காவிரி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே புதன்கிழமை காவிரி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:19 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே புதன்கிழமை காவிரி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

திருவிடைமருதூா் அருகே உள்ள கோனேரிராஜபுரத்தைச் சோ்ந்தவா் சுவாமிநாதன் மகன் மகாதேவன் (72). இவா் புதன்கிழமை உறவினா் வீட்டு துக்கநிகழ்வில் கலந்து கொண்ட பிறகு கல்யாணபுரத்தில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தாா்.

அப்போது, நீரில் மூழ்கிய மகாதேவனை அக்கம்பக்கத்தினா் சடலமாக மீட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருவிடைமருதூா் போலீஸாா் மகாதேவன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனை அனுப்பினா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.