45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மக்கள் நோ்காணல் முகாமில் நலத் திட்ட உதவிகள்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 99 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

News image
குருவிக்கரம்பையில் நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் பயணாளிகளுக்கு தஞ்சை ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் ,சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் ஆகியோா் நலத்திட்ட உதவிகளை வழங்கினா் .
Updated On :11 டிசம்பர் 2024, 8:23 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 99 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

குருவிக்கரம்பை  ஊராட்சியில் நடைபெற்ற முகாமிற்கு தஞ்சை மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் முன்னிலை வகித்தாா்.

முகாமில் 99 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 88 ஆயிரத்து 98 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். மேலும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

முகாமில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவா் மு. கி.முத்துமாணிக்கம், குருவிக்கரம்பை ஊராட்சி மன்றத் தலைவா் வைரவன் பயிற்சி ஆட்சியா் உத்கா்ஷ் குமாா்,  வட்டாட்சியா் தெய்வானை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகேந்திரன், சடையப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் கு.ஜெயஸ்ரீ வரவேற்றாா். நிறைவாக, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சங்கா் நன்றி கூறினாா்.