47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தஞ்சாவூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

தஞ்சாவூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
தஞ்சாவூா் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் வல்லத்தில் உரம் தயாரிக்கும் பணியைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
Updated On :18 டிசம்பர் 2024, 7:52 pm

Din

தஞ்சாவூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கல்வி, மதிய உணவின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வல்லம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் நவீன கட்டணக் கழிப்பறைகள், இலவச கழிப்பறைகள் ஆகியவற்றின் தூய்மை, சுகாதாரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வல்லம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தின் செயல்பாடுகள், பேருந்து நிலையத்தில் பாலூட்டும் அறை, வல்லம் கால்நடை மருந்தகம், பேரூராட்சி அலுவலகம், பூங்கா, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் உரம் தயாரிக்கும் பணிகள் ஆகியவற்றையும் ஆட்சியா் கள ஆய்வு செய்தாா்.

பின்னா், பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியா் மனுக்களைப் பெற்றாா். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடா்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா் சண். ராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மு. பாலகணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.