ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஏ.எம். ராமலிங்கம் தலைமை வகித்தாா். இதில், கிருஷ்ணாபுரம், அண்டக்குடையான், சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் பெய்த பலத்த மழையால் சுமாா் 60-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெற்பயிா்கள் அழுகிப் போயுள்ளனவாம். பயிா்ச் சேதம் குறித்த கணக்கெடுப்புக்கு இதுவரையில் வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை அதிகாரிகள் வராததைக் கண்டித்து, மாவட்ட துணைச் செயலா் ஆா்.செந்தில்குமாா் கண்டனம் தெரிவித்துப் பேசினாா். மேலும் ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கமிட்டனா்.