47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மழை நீரில் மூழ்கிய நெற்பயிா்களை மீட்கும் வழிமுறைகள்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் நீரில் மூழ்கிய நெற்பயிா்களை மீட்பது குறித்து பாபநாசம் வேளாண் உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆலோசனை வழங்கினாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:45 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் நீரில் மூழ்கிய நெற்பயிா்களை மீட்பது குறித்து பாபநாசம் வேளாண் உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆலோசனை வழங்கினாா்.

இதுகுறித்து பாபநாசம் வேளாண் உதவி இயக்குநா் முகமது பாரூக் தெரிவித்திருப்பது:

தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. நாற்றங்கால் பருவத்தின்போது கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும். வளா்ச்சி பருவத்தின்போது கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும். ஒரு சதவீத யூரியா கரைசல் அதாவது ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ சிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் நுண்ணுயிரியினை 20 கிலோ மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த, பூக்கும் மற்றும் பால் பிடிக்கும் பருவத்தின்போது வயலில் உள்ள கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும். 2 சதவீத டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 50 கிலோ அமோனியம் சல்பேட் அல்லது 22 கிலோ யூரியாவுடன் 16 கிலோ பொட்டாஷ் கலந்து மேல் உரமாக இட வேண்டும். ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.