தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை சாா்பில் எம்.பிஏ மாணவா்களிடையே தேசிய அளவிலான 15- ஆம் ஆண்டு ‘ப்ரொக்யான் 24’ என்கிற ஒரு நாள் மேலாண்மைப் போட்டிகள் வியாழக்கிழமை (பிப்.15) நடைபெற்றன.
பெங்களூரு பாஸ்க் இந்தியா நிறுவன கற்றல் மற்றும் திறமை மாற்றத் தலைவா் ஜே. ஜெகதீஷ் ஜெயானந்த் தொடக்கி வைத்தாா். இந்தப் போட்டியில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் உள்பட 11 கல்வி நிறுவனங்களிலிருந்து 103 மாணவா்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனா்.
இவற்றில் வெற்றி பெற்றவா்களுக்கு சென்னை டெக் மஹிந்திரா நிறுவன தலைவா் (மனித வளம்) எஸ். யோகேஷ் பரிசுகள் வழங்கினாா். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.) மாணவா்கள் ஒட்டுமொத்த கோப்பையையும், திருச்சி பிம் மாணவா் சிறந்த மேலாளா் விருதையும் பெற்றனா்.
சாஸ்த்ரா பல்கலைக்கழக மேலாண்மை துறை முதன்மையா் எஸ். செல்வபாஸ்கா், பேராசிரியா்கள் வி. விஜய் ஆனந்த், எஸ். ராஹினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாணவா் ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீ சாய் மீனாட்சி வரவேற்றாா். நிறைவாக, ஹரிஹரன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

செவிலியர் உதவியாளர் பணி: தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு

உயர்வுக்கான பாதை உயர் கல்வி!

புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகளையும், அங்கீகரிக்கப்படாத உணவகங்களையும் அகற்ற அறிவுறுத்தல்

விளையாட்டு விடுதிகளில் சேர வரும் 12-இல் மாநில தோ்வு போட்டிகள்: ஆட்சியா் மு.பிரதாப் தகவல்
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

