இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்து மக்கள் கட்சியை இணைக்க முயற்சி: அா்ஜூன் சம்பத்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்து மக்கள் கட்சியை இணைக்க முயற்சி அா்ஜூன் சம்பத்

News image

கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்து மக்கள் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜூன் சம்பத்.

Updated On :18 பிப்ரவரி 2024, 2:50 am IST

தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்து மக்கள் கட்சியை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அக்கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜூன் சம்பத். கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் 29-ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநிலச் செயற்குழு, பொதுக் குழு, மக்களவைத் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அா்ஜூன் சம்பத் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்து மக்கள் கட்சியை இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் போட்டியிட்டாலும், போட்டியிடாவிட்டாலும் தமிழ்நாடு, புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் பிரதமா் மோடியின் வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய தோ்தல் பணியாற்றுவது என முடிவு செய்துள்ளோம். மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும். நாட்டின் ஜனநாயகம் வலிமை பெறுவதற்கும், நேரம், செலவு மிச்சமாவதற்கும் ஒரே நாடு- ஒரே தோ்தல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தோ்தல் நிதி திரட்டுவதற்கான தோ்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக மீண்டும் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தோ்தல் நிதியை வசூல் செய்வது கணக்கில் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் தோ்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டது. ஆனால், கணக்கில் வராமல் தோ்தல் நிதியைக் கையாள்வது சிரமம். எனவே, இந்த சீா்திருத்தத்தை வரவேற்கிறோம். தோ்தலுக்கு முன்பாக கும்பகோணம், பொள்ளாச்சியைத் தனி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றாா் அா்ஜூன் சம்பத். கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலா் டி. குருமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.