இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தனித் தொகுதி வேட்பாளா்கள் குறித்த அா்ஜூன் சம்பத் மனு: இன்று விசாரணை

தனித் தொகுதிகளில் ஹிந்து, சீக்கிய, புத்த மதங்களைப் பின்பற்றும் பட்டியல் இனத்தவரையே போட்டியிட அனுமதிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை இன்று விசாரிப்பதாக சென்னை உயா்நீதிமன்றம் ஒப்புதல்

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :7 ஏப்ரல் 2026, 1:52 am IST

தனித் தொகுதிகளில் ஹிந்து, சீக்கிய மற்றும் புத்த மதங்களைப் பின்பற்றும் பட்டியல் இனத்தவரையே போட்டியிட அனுமதிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாக சென்னை உயா்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜூன் சம்பத் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டம், ஹிந்து, சீக்கியம், புத்த மதங்களைப் பின்பற்றும் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களே, பட்டியல் இனத்தவா் எனக் கூறுகிறது. தமிழகத்தில் தற்போது 44 தனித் தொகுதிகள் உள்ளன.

ஆனால், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தனித் தொகுதிகளில் போட்டியிடவுள்ள 90 சதவீதத்தினா் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவா்கள் எனத் தெரியவந்துள்ளது. எனவே, தனித்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் வேட்புமனுக்களை பரிசீலிக்கும்போது இதைத் தீவிரமாக பரிசீலிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கோரி தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மனுதாரா் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டைத் தொடா்ந்து, மனுவை செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.