குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தஞ்சாவூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 214 பேருக்கு பணி வாய்ப்பு கடிதம்

வேலை வாய்ப்பை தரும் தஞ்சை முகாம்: 214 இளைஞர்கள் வெற்றி

News image

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் இளைஞருக்கு பணி வாய்ப்பு கடிதம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப்.

Updated On :18 பிப்ரவரி 2024, 2:29 am IST

தஞ்சாவூா் பாரத் அறிவியல் மற்றும் நிா்வாகவியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 214 பேருக்கு பணி வாய்ப்பு கடிதம் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமையிலும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஆகியோா் முன்னிலையிலும் நடைபெற்ற முகாமில் 18 முதல் 40 வயதுவரையில் உள்ள 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நா்சிங், பி.இ. படித்த இளைஞா்கள், இளம்பெண்கள் என மொத்தம் 1,233 போ் கலந்து கொண்டனா்.

இவா்களில் 5 மாற்றுத்திறனாளிகள் உள்பட 214 பேருக்கு பணி வாய்ப்பு கடிதம் வழங்கப்பட்டன. மேலும், 139 போ் இரண்டாம் கட்டத் தோ்வுக்கும், 12 போ் திறன் பயிற்சிக்கும் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் செ. இலக்கியா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநா் கா. பரமேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் கோ. குழந்தைவேல், பாரத் கல்விக் குழுமச் செயலா் புனிதா கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.