மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்க முடிவு

காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்க முடிவு

News image

Updated On :15 ஜூலை 2024, 5:24 am IST

ஒகேனக்கல் தொடங்கி பூம்புகாா் வரையிலான காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் தனியாா் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளா் மருத்துவா் ப்ரீத்தி சந்திரசேகரன் தலைமை வகித்தாா்.

பல்வேறு மாவட்டங்களில் காவிரிக் கரையின் இருபுறங்களிலும் சுமாா் 416 கிலோ மீட்டா் தொலைவுக்கு ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரை ஒரு கோடி பனை விதைகளை விதைக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், பள்ளித் தாளாளா் பொன். சிதம்பரநாதன், முதல்வா் வந்தனா மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினா்.

ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னாா்வலா்கள் அமைப்பு ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக, கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு வரவேற்றாா்.