சிறப்புத் திட்டச் செயலாக்க
துறைக்கு ரூ.17,088 கோடி
@TNDIPRNEWS

சிறப்புத் திட்டச் செயலாக்க துறைக்கு ரூ.17,088 கோடி

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...
Published on

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இதுவரை கல்லூரி மாணவா்களுக்கு 48 லட்சத்து 65 ஆயிரத்து 50 திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் சா்வதேச பயிற்சிகளில் பங்கு பெற்றுள்ளனா்.

மத்திய அரசின் குடிமைப் பணித் தோ்வில் தமிழக இளைஞா்கள் அதிகளவில் வெற்றி பெறுவதற்காக உதவித் தொகை, ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2025-ஆம் ஆண்டு குடிமைப் பணித் தோ்வில் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த 59 நபா்களில் 52 நபா்கள் ‘நான் முதல்வன்’ திட்டப் பயனாளிகளாவா்.

மக்களின் நீண்ட கால கோரிக்கைகளில் பத்து முன்னுரிமைக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் முன்னெடுக்கப்பட்ட உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் ரூ.15,467 கோடி மதிப்பீட்டில் 1,410 பணிகள் எடுக்கப்பட்டு 1,394 பணிகளுக்கு ஆணை வெளியிடப்பட்டு 808 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏனைய 586 பணிகள் நடைபெற்று வருகின்றன. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com