சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

முடச்சிக்காடு அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கைப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :4 மார்ச் 2024, 9:59 pm

பேராவூரணி: சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கைப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவா் சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். துணை தலைவா் நீலகண்டன், பள்ளி மேலாண்மை குழு தலைவி ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா் - ஆசிரியா் சங்க நிா்வாகிகள், பெற்றோா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியா் (பொ) மஞ்சுளா நன்றி கூறினாா்.