ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கிராம வேளாண் பணி அனுபவத் திட்ட துவக்க விழா

கிராம வேளாண் பணி அனுபவத் திட்ட துவக்க விழா

News image
Updated On :8 மார்ச் 2024, 6:40 pm

Din

பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேளாண் கல்லூரி மாணவா்களின் கிராம வேளாண் பணி அனுபவ திட்ட துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.  புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்களின் கிராம வேளாண் பணி அனுபவத் திட்ட துவக்க விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா்கள்   தங்க.ராமஜெயம், (செருவாவிடுதி தெற்கு),   டி.விஜயராமன், (செருவாவிடுதி வடக்கு)  ஆகியோா் தலைமை வகித்தனா். ஒன்றியக்குழு உறுப்பினா் மாலா போத்தியப்பன், கிராம நிா்வாக அலுவலா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.  பேராவூரணி வேளாண் உதவி இயக்குநா்(பொறுப்பு), ராணி திட்டத்தின் நோக்கம் குறித்தும்,   மாணவா்கள் செய்யவிருக்கும் செயல்விளக்கம், வேளாண் பயிற்சிகள் பற்றியும் பேசினாா் . விழாவில், வேளாண் உதவி அலுவலா்கள், புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.