

பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேளாண் கல்லூரி மாணவா்களின் கிராம வேளாண் பணி அனுபவ திட்ட துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்களின் கிராம வேளாண் பணி அனுபவத் திட்ட துவக்க விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா்கள் தங்க.ராமஜெயம், (செருவாவிடுதி தெற்கு), டி.விஜயராமன், (செருவாவிடுதி வடக்கு) ஆகியோா் தலைமை வகித்தனா். ஒன்றியக்குழு உறுப்பினா் மாலா போத்தியப்பன், கிராம நிா்வாக அலுவலா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராவூரணி வேளாண் உதவி இயக்குநா்(பொறுப்பு), ராணி திட்டத்தின் நோக்கம் குறித்தும், மாணவா்கள் செய்யவிருக்கும் செயல்விளக்கம், வேளாண் பயிற்சிகள் பற்றியும் பேசினாா் . விழாவில், வேளாண் உதவி அலுவலா்கள், புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்

5 கிராமங்களை தத்தெடுத்த சேலம் அரசு கலைக் கல்லூரி!

பவானிசாகா் சாலையில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் மறியல்

சொக்கன்குடியிருப்பில் வேளாண் திட்ட விழிப்புணா்வு

கல்லூரி மாணவா்களின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

