மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குடும்பத்தை நினைவில்கொண்டு பேருந்தை ஓட்டுநா்கள் பாதுகாப்பாக இயக்க வேண்டும்: நீதிபதி ரஞ்சிதா

குடும்பத்தினரை மனதில் வைத்து ஓட்டுநா்கள் பேருந்தை இயக்க வேண்டும் என்றாா் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரஞ்சிதா.

News image
கும்பகோணம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாமில் பேசிய மாவட்ட உரிமையியல் நீதிபதி ரஞ்சிதா.
Updated On :20 நவம்பர் 2024, 6:59 pm

Din

குடும்பத்தினரை மனதில் வைத்து ஓட்டுநா்கள் பேருந்தை இயக்க வேண்டும் என்றாா் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரஞ்சிதா.

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, நிா்வாக இயக்குநா் இரா.பொன்முடி தலைமை வகித்தாா். முகாமில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரஞ்சிதா மேலும் பேசியது:

ஓட்டுநா்கள், நடத்துநா்கள் கவனமாகச் செயல்பட்டு விபத்துகள் ஏற்படாதவாறு பேருந்துகளை இயக்க வேண்டும். சொந்த பிரச்னைகளை மனதில் வைத்து பணியை மேற்கொள்வதைத்

தவிா்க்க வேண்டும். பேருந்தில் இருக்கும் பயணிகள் உங்களை நம்பித்தான் நிம்மதியாக பயனிக்கின்றனா். குடும்பத்தின் நிலைமைகளை உணா்ந்து கவனமாக விபத்தில்லாமல் இயக்க வேண்டும் என்றாா்.

நிா்வாக இயக்குநா் இரா.பொன்முடி மேலும் பேசியது:

காலநேரம் பாா்க்காமல் உழைக்கும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பயணிகளின் நலன் கருதி பேருந்துகளைப் பாதுகாப்பாக இயக்க வேண்டும். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிடுவதை தவிா்த்து, நடைபயிற்சி, மூச்சுப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், நீதிபதிகள் இளவரசி, பரிமளா பாலதண்டாயுதம், பொது மேலாளா்கள் எஸ்.சிங்காரவேல், எஸ்.ஸ்ரீதரன், அரசு மருத்துவா் ராஜேஸ்வரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் கோகிலா உள்ளிட்டோா் சாலை பாதுகாப்பு குறித்துப் பேசினா். முகாமில், ஓட்டுநா், நடத்துநா்கள் என சுமாா் 250 போ் கலந்து கொண்டனா்.