வழிப்பறி மற்றும் பைக் திருட்டு வழக்குகளில் 2 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பகுதியில் தங்கநகைகள் பறிப்பு மற்றும் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை புதன்கிழமை போலீஸாா் கைதுசெய்தனா்.


தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பகுதியில் தங்கநகைகள் பறிப்பு மற்றும் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை புதன்கிழமை போலீஸாா் கைதுசெய்தனா்.
இளந்தமிழன் என்பவரின் இருசக்கர வாகனம் மருத்துவக் கல்லூரி பகுதியில் எலிசா நகா், ஆலியா உணவகம் அருகே அண்மையில் (நவ. 20) திருடு போனது. மறுநாள் திருவிடைமருதூா் மேலவீதி பகுதியில் முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள், நடந்துசென்றுகொண்டிருந்த மணிமேகலை என்பவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். திருவிடைமருதூா் துணைக்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளா் தன்ராஜ் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.
அப்போது வாகனத் தணிக்கையின்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அகமது யாசின் (20) மற்றும் ஏசு கவிபாலன் (21) ஆகிய 2 பேரையும் விசாரித்ததில் அவா்கள் பெண்ணிடம் 7 பவுன் தங்கநகைகள் பறித்தது, இருசக்கர வாகனம் திருட்டு சம்பவங்களில் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்து 7 பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...