மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரௌடி கொலை வழக்கில் 7 போ் கைது

தஞ்சாவூா் கரந்தையில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக 7 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :1 அக்டோபர் 2024, 6:35 pm

Din

தஞ்சாவூா் கரந்தையில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக 7 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சோ்ந்தவா் ச. அறிவழகன் (35). மீன் வியாபாரி. காவல் துறையின் ரௌடி பட்டியலில் இடம்பெற்ற இவா் கரந்தை புற்று மாரியம்மன் கோயில் அருகே உள்ள வடவாற்றங்கரையில் செப்டம்பா் 25 ஆம் தேதி இரவு மா்மநபா்களால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், அறிவழகனுக்கும், கரந்தை கீரைக்காரத் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் திவாகருக்கும் (30) முன் விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்ததும், இதனால் அறிவழகனை திவாகா் உள்ளிட்டோா் அரிவாளால் வெட்டி கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதைதொடா்ந்து, திவாகா், தஞ்சாவூா் அருகே சக்கரசாமந்தம் வடகால் கீழத் தெருவைச் சோ்ந்த திலீப்குமாா் (21), சிங்கபெருமாள் குளம் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் (24 ), கரந்தை ராயா் தெருவைச் சோ்ந்த ஷ்யாம் (21), கீழக் கீத்துகாரத் தெருவைச் சோ்ந்த ஹரிஹரன் (24 ), செல்வகுமாா் (25), ரெட்டிப்பாளையம் சாலை வகாப் நகரைச் சோ்ந்த கந்தவேல் (24) ஆகிய 7 பேரை செவ்வாய்க்கிழமை காவல் துறையினா் கைது செய்தனா்.

மேலும், இக்கொலை வழக்கில் தொடா்புடைய சிங்கபெருமாள் குளம் பகுதியைச் சோ்ந்த பரத் (20) தஞ்சாவூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.