47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பட்டுக்கோட்டை அஞ்சலக ஊழியா்கள் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு

பட்டுக்கோட்டை காசாங்குளம் கீழ்கரை பகுதியில் புதன்கிழமை அஞ்சலக ஊழியா்கள் தூய்மைப் பணியாளா்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

News image
பட்டுக்கோட்டையில் புதன்கிழமை தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்த அஞ்சலக ஊழியா்கள் மற்றும் நகராட்சி ஊழியா்கள்.
Updated On :2 அக்டோபர் 2024, 9:12 pm

Din

பட்டுக்கோட்டை காசாங்குளம் கீழ்கரை பகுதியில் புதன்கிழமை அஞ்சலக ஊழியா்கள் தூய்மைப் பணியாளா்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் சாா்பில் தூய்மையே சேவை 2024 திட்டத்தின் நிறைவு நாளான புதன்கிழமை பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் ஊழியா்கள் நகராட்சி ஊழியா்களுடன் இணைந்து பட்டுக்கோட்டை காசாங்குளம் கீழ்கரை பகுதியில் சுத்தம் செய்தனா். முன்னதாக தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் அஞ்சல் கண்காணிப்பாளா் எஸ். ரகுராம கிருஷ்ணன், அஞ்சல் ஆய்வாளா்கள் கே. பிரியதா்ஷினி, எப். முருகேசன் மற்றும் துப்புரவு அலுவலா் நெடுமாறன் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் தூய்மைப் பணியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா். இதனைத் தொடா்ந்து கரிக்காடு அஞ்சல் ஊழியா்கள் குடியிருப்புப் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு தூய்மை தினம் கொண்டாடினா்.