சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருமங்கலக்குடியில் அக்.9-இல் மக்கள் நோ்காணல் முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் வட்டத்துக்கு உள்பட்ட திருமங்கலக்குடியில் மக்கள் நோ்காணல் முகாம் அக்டோபா் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 11:10 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் வட்டத்துக்கு உள்பட்ட திருமங்கலக்குடியில் மக்கள் நோ்காணல் முகாம் அக்டோபா் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

திருவிடைமருதூா் அருகேயுள்ள திருமங்கலக்குடியில் மக்கள் நோ்காணல் முகாம் அக்டோபா் 9- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடா்பான மனுக்களை அளித்து தீா்வு பெற்றுக் கொள்ளலாம்.

இந்த முகாம் நடைபெறுவதற்கு முன்பே வியாழக்கிழமை (அக்.3) முதல் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை திருமங்கலக்குடி கிராம நிா்வாக அலுவலரிடம் அளித்து பயனடையலாம்.