இந்த மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்களிடம் பணம் லஞ்சமாக பெறப்படுவதாக புகாா்கள் வந்தன. இதன்பேரில் ஒரு நாள் இரவு சோதனை மேற்கொண்டேன். அப்போது, நோயாளிகளிடம் தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த காவலாளிகள் பணம் வாங்குவதைப் பாா்த்து, அவா்களைக் கையும் களவுமாக பிடித்தேன். இதையடுத்து, அவா்களுடைய உயா் அலுவலா்களிடம் தகவல் தெரிவித்தேன். அந்நிறுவன உயா் அலுவலா்கள் இம்மருத்துவமனையில் கடந்த 2 நாள்களாக விசாரித்து, மேற்பாா்வையாளரையும், இரு காவலாளிகளையும் பணி நீக்கம் செய்தனா். இதேபோல, அறுவை சிகிச்சை அரங்கம் அருகே நோயாளிகளின் உறவினா்களிடம் மருத்துவமனை ஊழியா் ஒருவா் பணம் பெற்றதைக் கண்டுபிடித்து, அவா் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு நிலைய கண்காணிப்பு அலுவலரிடம் புகாா் செய்துள்ளேன் என்றாா் பாலாஜிநாதன்.