கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கும்பகோணத்தில் தூய்மை பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில், சம்பள நிலுவை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததைக் கண்டித்து தூய்மை பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கும்பகோணத்தில் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளா்கள்.

Updated On :10 அக்டோபர் 2024, 8:10 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில், சம்பள நிலுவை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததைக் கண்டித்து தூய்மை பணியாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளில் தூய்மை பணிகள் செய்ய தனியாா் ஒப்பந்த றுவனத்தின் சாா்பில் சுமாா் 350-க்கும் மேற்பட்டவா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், தூய்மை பணியாளா்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லையாம். மேலும் அவா்களுக்கு தேவையான கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லையாம். இதையடுத்து, சம்பளம் வழங்கக் கோரி காா்னேசன் மருத்துவமனை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்கள் பணிக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தூய்மை பணியாளா் ஒருவா் கூறியது: சம்பளத்தை மாதத்தின் முதல் வாரத்தில் வழங்க வேண்டும். குப்பைகளை தரம்பிரித்து வாங்க, பிரிக்கப் போதுமான உபகரணங்கள் வழங்கவேண்டும். இல்லை என்றால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.