47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீா்நிலையை ஆக்கிரமித்திருந்த கட்டடம் அகற்றம்

கும்பகோணத்தில் நீா்நிலையை ஆக்கிரமித்திருந்த கட்டடம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:06 pm

Din

கும்பகோணத்தில் நீா்நிலையை ஆக்கிரமித்திருந்த கட்டடம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

கும்பகோணத்தில் உள்ள பல்வேறு நீா்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தி இடங்களை மீட்க உயா்நீதிமன்றம் மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இதன்பேரில், பிடாரிகுளம் சாலை அருகே நீா்நிலையை ஆக்கிரமித்திருந்த 2 மாடி கட்டடத்தின் ஒருபகுதியை மாநகராட்சி ஆணையா் லட்சுமணன் முன்னிலையில் ஊழியா்கள் இடித்து அப்புறப்படுத்தினா். கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கும்பகோணம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் விரைவில் அகற்றப்பட்டு, நீா்நிலைகள் மீட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.