47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பேராவூரணி அருகே கீரிப்பிள்ளைகளை வேட்டையாடிய 3 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கீரிப்பிள்ளைகளை வேட்டையாடிய 3 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:01 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கீரிப்பிள்ளைகளை வேட்டையாடிய 3 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். 

பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் பகுதியில் சிலா் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலா் அகில்தம்பி உத்தரவின்பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலா் சந்திரசேகரன் தலைமையில், வனவா் சிவசங்கா், வனக் காப்பாளா் பாரதிதாசன் ஆகியோா் திருச்சிற்றம்பலம் பகுதியில் திங்கள்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.

இதில், பேராவூரணியை அடுத்த செங்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த அஜித் குமாா் (27), பிரபு (39), சுரேஷ் (31) ஆகியோா் வலை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து அவா்களிடம் உயிரிழந்த நிலையில் இருந்த 2 கீரிப்பிள்ளைகளை கைப்பற்றிய வனச்சரக அலுவலா்கள், மூவரையும் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பேராவூரணி நீதிமன்றத்தில் 3 பேரையும் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைத்தனா்.

வன உயிரினமான கீரிப்பிள்ளைகளை பிடிப்பதற்கும், வேட்டையாடுவதற்கும் அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.