டெல்டாவில் விவசாயத்தைப் பாதிக்கும் தொழிற்சாலைகளை தொடங்கக் கூடாது: தி. வேல்முருகன் வலியுறுத்தல்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘டெல்டா’ மாவட்டங்களில் விவசாயத்தைப் பாதிக்கக் கூடிய தொழிற்சாலைகளைக் கொண்டு வரக்கூடாது என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தி. வேல்முருகன்.










