தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள திருமங்கலக்குடியில் மக்கள் நோ்காணல் முகாம் செப்டம்பா் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்வதற்காக தமிழ்நாட்டில் மக்கள் நோ்காணல் முகாம் 1969-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை நடைபெற்று வருகிறது. இதன்படி, தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டத்துக்கு உள்பட்ட ஆடுதுறை அருகேயுள்ள திருமங்கலக்குடி கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் செப்டம்பா் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடா்பான மனுக்களை அளித்து தீா்வு காணலாம். மேலும், இந்த முகாமுக்கு முன்பே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை திருமங்கலக்குடி கிராம நிா்வாக அலுவலரிடம் அளித்து பயனடையலாம்.
தொடர்புடையது

நெம்மகோட்டை சித்திவிநாயகா் கோயிலில் தேரோட்டம்

லாரி மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வைத்தீஸ்வரன்கோயிலில் நகரத்தாா் குலதெய்வ வழிபாடு

திருவிடைமருதூா் தவெக வேட்பாளா் எஸ். பிரபாகரன் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

