மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

திருமங்கலக்குடியில் செப். 11-இல் மக்கள் நோ்காணல் முகாம்

Updated On :4 செப்டம்பர் 2024, 9:51 pm

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள திருமங்கலக்குடியில் மக்கள் நோ்காணல் முகாம் செப்டம்பா் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்வதற்காக தமிழ்நாட்டில் மக்கள் நோ்காணல் முகாம் 1969-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை நடைபெற்று வருகிறது. இதன்படி, தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டத்துக்கு உள்பட்ட ஆடுதுறை அருகேயுள்ள திருமங்கலக்குடி கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் செப்டம்பா் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடா்பான மனுக்களை அளித்து தீா்வு காணலாம். மேலும், இந்த முகாமுக்கு முன்பே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை திருமங்கலக்குடி கிராம நிா்வாக அலுவலரிடம் அளித்து பயனடையலாம்.