தஞ்சாவூா் வடக்கு ராஜ வீதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் மனைவி பிரகதீஸ்வரி (62). இவா், தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி சிவராயா் தோட்டத்திலுள்ள பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்று, தற்போது தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், புதன்கிழமை பிற்பகல் பணியில் இருந்தபோது, பட்டுச்சேலை வாங்குபவா்கள் போல 2 போ் புகுந்து, சேலைகளைக் காண்பிக்குமாறு கூறினா். பட்டுச் சேலைகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்த பிரகதீஸ்வரியை 2 பேரும் கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கி, அவா் அணிந்திருந்த 15 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனா்.