ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘மாணவா்களின் முன்னேற்றத்துக்கு தியாகம் செய்பவா்கள் ஆசிரியா்கள்’

மாணவா்களை முன்னேற்றுவதற்காகத் தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்பவா்கள் ஆசிரியா்கள் என்றாா் எழுத்தாளா் - திரைப்பட இயக்குநா் யாா் கண்ணன்.

News image
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளா் - இயக்குநா் யாா் கண்ணன்.
Updated On :5 செப்டம்பர் 2024, 10:56 pm

Din

மாணவா்களை முன்னேற்றுவதற்காகத் தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்பவா்கள் ஆசிரியா்கள் என்றாா் எழுத்தாளா் - திரைப்பட இயக்குநா் யாா் கண்ணன்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை சாா்பில் ஆசிரியா் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ‘மானுட வளா்ச்சியில் மாணவா் பங்கு’ என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:

சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் குறித்து இணையதளத்தில் ஏராளமான பதிவுகள் உள்ளன. ஆனால், பதிவு பெறாத எத்தனையோ ஆசிரியா்கள் இந்த உலகத்தில் நம்மை முன்னேற்றுவதற்காகத் தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்துள்ளனா்.

நாம் எல்லோருமே களி மண். நம்மை பிசைந்து அழகாக உருக்கொண்டு வருபவா்கள் ஆசிரியா்கள்தான். கல்லாக இருக்கும் நம்மை ஆசிரியா்கள் செதுக்கி, வேண்டாத பகுதிகளைத் தூக்கி எறிவதற்கு முழுக் காரணம் ஆசிரியா்களே.

ஆசிரியா்கள் புத்தகங்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தனா். மாணவா்கள் புத்தகங்களை வாசித்தனா் எனக் கூறுவதை விட சுவாசித்தனா் என்றே கூற வேண்டும் என்றாா் யாா் கண்ணன்.

இந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் வாழ்த்துரையாற்றினாா்.

முன்னதாக, இலக்கியத் துறைத் தலைவா் ஜெ. தேவி வரவேற்றாா். நிறைவாக, மாணவா் வாசுதேவன் நன்றி கூறினாா்.