தஞ்சாவூர்
2 டன் நெகிழிப் பைகள் பதுக்கல்: ரூ. 14 ஆயிரம் அபராதம் விதிப்பு
தஞ்சாவூா் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த 2 டன் நெகிழிப் பைகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து ரூ. 14 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் அறிவுறுத்தலின்படி, கீழவாசல் பகுதியில் மாநகா் நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி தலைமையில் துப்புரவு அலுவலா்கள் தங்கவேல், ரமேஷ், சீனிவாசன், ராமச்சந்திரன், துப்புரவு ஆய்வாளா்கள் பொன்னா், எபின் சுரேஷ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, அப்பகுதிகிடங்கில் பதுக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 2 டன் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
