மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொல்லியல் தொழில் முனைவு நிறுவனம் தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறையின் முன்னாள் மாணவா்கள் இணைந்து தொல்லியல் தொழில் முனைவு நிறுவனத்தை புதன்கிழமை தொடங்கினா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 8:36 pm

Din

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறையின் முன்னாள் மாணவா்கள் இணைந்து தொல்லியல் தொழில் முனைவு நிறுவனத்தை புதன்கிழமை தொடங்கினா்.

இதன் தொடக்க விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமை வகித்து பேசியது:

தொல்லியலில் முதுகலைப் பட்டம் பெற்ற மாணவா்களால் உருவக்கப்பட்டுள்ள இந்நிறுவனம் டமரிகா என்ற தமிழகத்தின் பெயரை இந்தியப் பெருங்கடற்பரப்புப் பாா்வையில் பெற்றுள்ளது. இதன் வழியாகப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்களுக்கும், பொதுமக்கள், ஆா்வலா்களுக்கும் தொல்லியல், கல்வெட்டியல், மரபுகள் தொடா்பான பயிற்சி வகுப்புகள், பயிலரங்கம், மரபு நடை, கல்விச்சுற்றுலா, அறிவியல்சாா் தொல்லியல் பயிற்சி, மென்பொருள் பயிற்சி, மாதிரி அகழாய்வுப் பயிற்சி, கல்வெட்டு எழுத்துப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படும் என்றாா் அவா்.

இவ்விழாவில் சுவடிப்புல முதன்மையா் த. கண்ணன், கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறைத் தலைவா் வீ. செல்வகுமாா், தமிழ்ப் பல்கலைக்கழகத் தகைசால் பேராசிரியா் இரா. சங்கரன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். டமரிகா நிறுவனத் தலைவா் அ. ஆகாஷ் நோக்கவுரையாற்றினாா். நிறுவன முதன்மை உறுப்பினா்கள் வீ.சு. காயத்ரி, சி. விஜய்பாரத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.