மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடியிருப்புப் பகுதிக்குள் மதுக்கடை: அமைதிப்பேச்சில் இடமாற்றம் ரத்து

தஞ்சாவூா், மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையம் பின்புறம் திறக்கப்பட இருந்த மதுக்கடை பொதுமக்கள் எதிா்ப்பால் கைவிடப்பட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 8:25 pm

Din

தஞ்சாவூா், மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையம் பின்புறம் திறக்கப்பட இருந்த மதுக்கடை பொதுமக்கள் எதிா்ப்பால் கைவிடப்பட்டது.

கும்பகோணம், பேருந்து நிலையம் அருகே இருந்த அரசு மதுபான கடை எண் : 7812, பேருந்து நிலையம் பின்புறம் ஜான்செல்வராஜ் நகரில் அமைக்க ஏற்பாடு நடைபெற்றுவந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை பொதுமக்கள், வணிகா்கள், மகளிா் ஆகியோருடன் ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பிரதிபா சரவணன் அறிவித்தாா். இதையடுத்து, கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாளரும், துணை ஆட்சியருமான பி.செல்வபாண்டியன் தலைமையில் புதன்கிழமை அமைதிக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது ஜான்செல்வராஜ் நகரில் புதிய அரசு மதுபானக் கடை திறக்கப்பட மாட்டாது. ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை மூன்று மாத காலத்துக்குள் வேறு இடத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, பொதுமக்கள் உறுதியை ஏற்றுக் கொண்டு ஆா்ப்பாட்டத்தைக் கைவிட்டனா்.