மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இளைஞரைத் தாக்கியோரை கைது செய்யக் கோரி மறியல்

பேராவூரணியில் இளைஞரைத் தாக்கியோரைக் கைது செய்யக் கோரி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 47 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை மறியல்
Updated On :12 செப்டம்பர் 2024, 7:36 pm

Din

பேராவூரணியில் இளைஞரைத் தாக்கியோரைக் கைது செய்யக் கோரி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 47 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பேராவூரணி அருகேயுள்ள சோழகனாா்வயல் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் ( 28) கடந்த 4 ஆம் தேதி வெளியூா் சென்று விட்டு தனது நண்பா் குகநாதனுடன்  ஊருக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது தனக்கு முன்னாள்  பைக்கில் சென்றவா்களிடம் வழிவிடுமாறு கேட்டாராம். இதில் கோபமடைந்த கழனிவாசலை சோ்ந்த  சிவா, விக்னேஷ், கவுதம் ,கோபால் ஆகிய 4 பேரும் பாண்டியனை கொரட்டூா் டாஸ்மாக் கடை அருகே  பீா்பாட்டில் மற்றும் ஆயுதங்களால்  தாக்கினராம். இதில் காயமடைந்த பாண்டியன் பேராவூரணி காவல் நிலையத்தில் புகாா் செய்து , பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட  4 பேரும் நீதிமன்றத்தில்  முன்ஜாமீன் பெற்று வெளியில் சுற்றித் திரிந்தனராம்.

இதனால் ஆத்திரமடைந்த  பாண்டியனின் உறவினா்கள் 4 பேரையும் கைது செய்ய  வலியுறுத்தியும், கடும் பிரிவுகளில் வழக்குப் பதியாத போலீஸாரை  கண்டித்தும் அண்ணா சிலை அருகில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் , ஆய்வாளா்  பசுபதி மற்றும் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 47 பேரை கைது செய்து திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனா்.