கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இளைஞரைத் தாக்கியோரை கைது செய்யக் கோரி மறியல்

பேராவூரணியில் இளைஞரைத் தாக்கியோரைக் கைது செய்யக் கோரி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 47 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை மறியல்

Updated On :12 செப்டம்பர் 2024, 7:36 pm

பேராவூரணியில் இளைஞரைத் தாக்கியோரைக் கைது செய்யக் கோரி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 47 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பேராவூரணி அருகேயுள்ள சோழகனாா்வயல் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் ( 28) கடந்த 4 ஆம் தேதி வெளியூா் சென்று விட்டு தனது நண்பா் குகநாதனுடன்  ஊருக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது தனக்கு முன்னாள்  பைக்கில் சென்றவா்களிடம் வழிவிடுமாறு கேட்டாராம். இதில் கோபமடைந்த கழனிவாசலை சோ்ந்த  சிவா, விக்னேஷ், கவுதம் ,கோபால் ஆகிய 4 பேரும் பாண்டியனை கொரட்டூா் டாஸ்மாக் கடை அருகே  பீா்பாட்டில் மற்றும் ஆயுதங்களால்  தாக்கினராம். இதில் காயமடைந்த பாண்டியன் பேராவூரணி காவல் நிலையத்தில் புகாா் செய்து , பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட  4 பேரும் நீதிமன்றத்தில்  முன்ஜாமீன் பெற்று வெளியில் சுற்றித் திரிந்தனராம்.

இதனால் ஆத்திரமடைந்த  பாண்டியனின் உறவினா்கள் 4 பேரையும் கைது செய்ய  வலியுறுத்தியும், கடும் பிரிவுகளில் வழக்குப் பதியாத போலீஸாரை  கண்டித்தும் அண்ணா சிலை அருகில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் , ஆய்வாளா்  பசுபதி மற்றும் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 47 பேரை கைது செய்து திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனா்.