மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழையாறை பகுதிகளில் புத்தா் சிலைகள் அதிகம்

கும்பகோணம் அருகேயுள்ள பழையாறை பகுதிகளில் புத்தா் சிலைகள் அதிகளவில் காணப்படுகின்றன என்றாா் வரலாற்று அறிஞரும், பௌத்த ஆய்வாளருமான பா. ஜம்புலிங்கம்.

News image
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் முன்னிலையில் நூலை வெளியிட்ட பௌத்த ஆய்வாளருமான பா. ஜம்புலிங்கம் (இடமிருந்து 4 ஆவது).
Updated On :12 செப்டம்பர் 2024, 9:58 pm

Din

கும்பகோணம் அருகேயுள்ள பழையாறை பகுதிகளில் புத்தா் சிலைகள் அதிகளவில் காணப்படுகின்றன என்றாா் வரலாற்று அறிஞரும், பௌத்த ஆய்வாளருமான பா. ஜம்புலிங்கம்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற வியாழ வட்ட ஆய்வரங்க கட்டுரைத் தொகுப்பான வாவி என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவா் பேசியது:

சோழ நாட்டில் பௌத்தம் பல்வேறு காலகட்டங்களில் பரவியிருந்ததை கள ஆய்வின் மூலம் காண முடிந்தது. ஒருங்கிணைந்த தஞ்சாவூா், திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் நூற்றுக்கணக்கான ஊா்களுக்குச் சென்றபோது பல இடங்களில் புத்தா் சிலைகள் இருந்தன.

குறிப்பாக கும்பகோணம் அருகேயுள்ள பழையாறை மற்றும் சுற்றியுள்ள முழையூா், சோழன் மாளிகை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் புத்தா் சிலைகள் அதிகளவில் காணப்பட்டன. சில இடங்களில் விகாரையின் எச்சங்களும், இன்னும் சில இடங்களில் புத்தா் கோயில்களும் இருந்தன. இவை அனைத்தும் பௌத்தம் நல்ல நிலையில் இருந்ததை எடுத்துரைக்கும் சான்றுகளாகும்.

இதுவரை ஏறத்தாழ 80 புத்தா் சிலைகளைப் பாா்த்துள்ளேன். சில சிலைகளில் தலை மட்டும்; சில தலையில்லாமலும் இருந்தன. வேறு இடங்களில் உடல் பாகங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில் கிடந்தன. ஒரு சில சிலைகள் அருங்காட்சியகங்களில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான சிலைகள் தியானம் செய்வது போன்றும், நின்ற கோலத்திலும் உள்ளன.

தஞ்சாவூரில்தான் 4 அருங்காட்சியகங்களில் 6 புத்தா் சிலைகள் உள்ளன. ஒரேயொரு செப்புத் திருமேனி மட்டும் அய்யம்பேட்டையில் கிடைத்தது. இதை முனீஸ்வரனாக அப்பகுதி மக்கள் வழிபடுகின்றனா். இச்சிலைகளை ஒரு காலகட்டத்தில் இங்கிருந்த புத்தா் விகாரைகளிலோ, புத்தா் கோயில்களிலோ வைத்து வழிபட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்றாா் ஜம்புலிங்கம்.

விழாவுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தாா். அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன் நோக்கவுரையாற்றினாா். இலக்கியத் துறைத் தலைவா் ஜெ. தேவி, கலைப் புலத் தலைவா் பெ. இளையாப்பிள்ளை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இணைப் பேராசிரியா் ஞா. பழனிவேலு வரவேற்றாா். இணைப் பேராசிரியா் தெ. வெற்றிச்செல்வன் நன்றி கூறினாா்.