மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தஞ்சாவூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

News image
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :18 செப்டம்பர் 2024, 8:55 pm

Din

அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குறித்து தரக்குறைவாகப் பேசிய தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச். ராஜாவைக் கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், எச். ராஜாவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் கோ. அன்பரசன், பொதுச் செயலா் என். மோகன்ராஜ், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் குணா பரமேஸ்வரி, பட்டுக்கோட்டை நகரத் தலைவா் ராமசாமி, அதிராம்பட்டினம் நகரத் தலைவா் தமிம் அன்சாரி, பொதுக்குழு உறுப்பினா்கள் கண்டிதம்பட்டு கோவிந்தராஜ், கதா் வி. வெங்கடேசன், வட்டாரத் தலைவா்கள் ரெங்கநாதன், ரவிச்சந்திரன், இப்ராகிம்ஷா, மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் பிரபு, மாநகர மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ப. சத்தியமுா்த்தி, மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவா் பொன் நல்லதம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.