மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உலக தற்கொலை தடுப்பு தினக் கருத்தரங்கம்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :18 செப்டம்பர் 2024, 8:58 pm

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

மன நல மருத்துவத் துறை, தஞ்சாவூா் மன நல மருத்துவக் கழகம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா். பாலாஜிநாதன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் என். ஆறுமுகம், மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

சென்னை மூத்த மனநல மருத்துவப் பேராசிரியா் வி. ஜெயந்தினி, வேலூா் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் வி. ஜெயக்குமாா், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மூத்த துணைப் பேராசிரியா் ஜி. அன்பழகன், திருவாரூா் மருத்துவக்கல்லூரி துணைப் பேராசிரியா் ஜெ. பாபு பாலசிங் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இக்கருத்தரங்கத்தில் தற்கொலையைத் தடுப்பதற்காக தமிழக அரசின் மருத்துவத் துறை மூலம் மனநல கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்கள் 14416 மற்றும் 104 செயல்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது.

இதில், பேராசிரியா் இ. மீனாட்சி, மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள், செவிலிய மாணவா்கள் கலந்து கொண்டனா்.