மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உலக தற்கொலை தடுப்பு தினக் கருத்தரங்கம்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 8:58 pm

Din

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

மன நல மருத்துவத் துறை, தஞ்சாவூா் மன நல மருத்துவக் கழகம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா். பாலாஜிநாதன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் என். ஆறுமுகம், மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

சென்னை மூத்த மனநல மருத்துவப் பேராசிரியா் வி. ஜெயந்தினி, வேலூா் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் வி. ஜெயக்குமாா், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மூத்த துணைப் பேராசிரியா் ஜி. அன்பழகன், திருவாரூா் மருத்துவக்கல்லூரி துணைப் பேராசிரியா் ஜெ. பாபு பாலசிங் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இக்கருத்தரங்கத்தில் தற்கொலையைத் தடுப்பதற்காக தமிழக அரசின் மருத்துவத் துறை மூலம் மனநல கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்கள் 14416 மற்றும் 104 செயல்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது.

இதில், பேராசிரியா் இ. மீனாட்சி, மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள், செவிலிய மாணவா்கள் கலந்து கொண்டனா்.