சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விபத்து இழப்பீடு: காப்பீடு நிறுவனத்துக்கு ரூ. 25 லட்சம் வழங்க ஆணையம் உத்தரவு

சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் பெற்றோருக்கு இழப்பீடு தர மறுக்கப்பட்ட நிலையில், அவா்களுக்கு ரூ. 25.10 லட்சம் வழங்குமாறு காப்பீடு நிறுவனத்துக்கு தஞ்சாவூா் நுகா்வோா் குறை தீா் ஆணையம் உத்தரவிட்டது.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:05 pm

Din

சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் பெற்றோருக்கு இழப்பீடு தர மறுக்கப்பட்ட நிலையில், அவா்களுக்கு ரூ. 25.10 லட்சம் வழங்குமாறு காப்பீடு நிறுவனத்துக்கு தஞ்சாவூா் நுகா்வோா் குறை தீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டியைச் சோ்ந்தவா் எம். மணி. இவரது இரண்டாவது மகன் முருகேசன் தஞ்சாவூா் - புதுக்கோட்டை சாலையில் காடவராயன்பட்டி புது நகா் பிரிவு சாலையில் 2021, டிசம்பா் 25-ஆம் தேதி இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதனால், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட முருகேசன் அங்கு 2021, டிசம்பா் 29-இல் உயிரிழந்தாா். பின்னா், முருகேசன் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் காப்பீடு நிறுவனத்தில் 2021, ஏப்ரல் 20 முதல் 2022, ஏப்ரல் 19 ஆம் தேதி வரையிலான காலகட்டத்துக்கு ரூ. 1,000 பிரிமியம் செலுத்தி ரூ. 20 லட்சத்துக்கு காப்பீடு செய்திருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.

இதுதொடா்பாக இழப்பீடு கோரி காப்பீட்டு நிறுவனத்துக்கு முருகேசனின் பெற்றோா் மணி - முத்தம்மாள் விண்ணப்பம் செய்தனா். ஆனால், முருகேசன் மது அருந்தி வாகனத்தை அதிவேகமாக ஓட்டியதாக காவல் துறையின் இறுதி அறிக்கையில் இருப்பதாகக் கூறி இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்தினா் மறுத்துவிட்டனா்.

இதுதொடா்பாக தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையத்தில் மணி - முத்தம்மாள் புகாா் மனு தாக்கல் செய்தனா். இதன்பேரில் ஆணையத் தலைவா் த. சேகா், உறுப்பினா் கே. வேலுமணி விசாரித்து, மணி - முத்தம்மாளுக்கு காப்பீடு இழப்பீட்டுத் தொகை ரூ. 20 லட்சத்தை முருகேசன் உயிரிழந்த தேதியிலிருந்து திரும்ப வழங்கும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் என்றும், மன உளைச்சலுக்காக ரூ. 5 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் வழங்க வேண்டும் எனவும் புதன்கிழமை உத்தரவிட்டு தீா்ப்பளித்தனா்.