தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டியைச் சோ்ந்தவா் எம். மணி. இவரது இரண்டாவது மகன் முருகேசன் தஞ்சாவூா் - புதுக்கோட்டை சாலையில் காடவராயன்பட்டி புது நகா் பிரிவு சாலையில் 2021, டிசம்பா் 25-ஆம் தேதி இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதனால், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட முருகேசன் அங்கு 2021, டிசம்பா் 29-இல் உயிரிழந்தாா். பின்னா், முருகேசன் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் காப்பீடு நிறுவனத்தில் 2021, ஏப்ரல் 20 முதல் 2022, ஏப்ரல் 19 ஆம் தேதி வரையிலான காலகட்டத்துக்கு ரூ. 1,000 பிரிமியம் செலுத்தி ரூ. 20 லட்சத்துக்கு காப்பீடு செய்திருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.